எதிர்வரும் பொதுத்தேர்தல்…… 3 மாதங்கள் வரை இடம்பெறாது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுத்தேர்தல் 3 மதங்கள் வரை ஒத்திவைக்கப்படும் என அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 மாதங்கள் வரை தேர்தலை ஒத்திவைப்பதே சரியான தெரிவு என்ற வகையில் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.